இன்றைய மாலை, கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிபுத்தூர், கிருஷ்ணாபுரம், கரையாம்பாளையம் பிரிவு, செஞ்சேரிமலை, பூராண்டாம்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், இருகூர் பகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன், தாமரை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தோம். செல்லும் இடங்களில் எல்லாம், பொதுமக்கள் பெரும் எழுச்சியுடன் பேராதரவை வெளிப்படுத்தினர். (1/6)
வரும் பாராளுமன்றத் தேர்தல், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் தேர்தல். நாட்டை வலிமையாக, பொருளாதாரத்தில் முதன்மையாக மாற்ற, நதி நீர் இணைப்பு உள்ளிட்ட மிக முக்கியமான முடிவுகள் எடுக்க, நமது பிரதமர் அவர்கள் கரங்களை, நாடு முழுவதும் வலுப்படுத்த வேண்டும். நமது கோவை பாராளுமன்றத் தொகுதியும், நமது பிரதமர் கொண்டு வரும் நலத்திட்டங்கள் மூலம் முழுமையாகப் பலன்பெற, இங்கிருந்தும், நாம் நம்முடைய பாராளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். (2/6)
@annamalai_k Ethu tha unaku laddu 😄😄😄